குஜராத்தில் புதிய வகை கொரோனா .. 120 மடங்கு பாதிப்பு ஏற்படும் என தகவல்!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (16:56 IST)
சீனாவில் தற்போது மிக மோசமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து இந்தியா உள்பட அனைத்து உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் இந்த கொரோனா வைரஸ் முந்தைய கொரோனா வைரசை விட 120 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் குஜராத் மாநிலத்திலும் பரவி விட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து குஜராத் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்