மணிப்பூர் கொடூரம்: கடந்த மாதமே அனுப்பப்பட்ட புகார்.. கண்டுகொள்ளவில்லையா தேசிய மகளிர் ஆணையம்?

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (11:50 IST)
மணிப்பூர் விவகாரம் குறித்து கடந்த மாதமே தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த புகாரை  தேசிய மகளிர் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ நேற்று வெளியாகி இணையதளத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியது.  இந்த வீடியோ நேற்றுதான் இணையதளத்தில் வெளியானாலும் கடந்த மாதமே வெளிநாட்டு அமைப்பு ஒன்று இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அனுப்பியதாகவும் ஆனால் அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் மகளிர் ஆணையம் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய பிறகு தேசிய மகளிர் ஆணையம் தற்போது தாமாகவே முன்வந்து விசாரணை செய்து வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.  
 
இந்த தகவல் உண்மையா என்பதை தேசிய மகளிர் ஆணையம் விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்