வெயிலின் தாக்கத்தால் காருக்குள் பாய்ந்த குதிரை

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (16:38 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக குதிரை ஒன்று சாலையில் ஓடி காருக்குள் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


 
ராஜாஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குதிரை வண்டிக்காரர் ஒருவர் சாலை ஓரமாக தனது குதிரையை கட்டி வைத்திருந்தார். வெயிலின் தாக்கம் காரணமாக குதிரை கயிற்றை அறுத்துக்கொண்டு சாலையில் ஓடியது.
 
சாலையில் ஓடிய குதிரை பைக் மீது மோதி எதிரே வந்து காரின் மேல் பாய்ந்தது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. காரை ஓட்டி வந்தவரும், குதிரையும் சிக்கிக்கொண்டது. பின்னர் போராடி குதிரையும், கார் ஓட்டுநரும் மீட்கப்பட்டனர். 
அடுத்த கட்டுரையில்