வடக்கு அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி.. கனமழைக்கு வாய்ப்பு என தகவல்..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (10:49 IST)
வடக்கு அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செப்டம்பர் 29ஆம் தேதி சூறாவளி சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனால் ஆந்திரா தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதியில் இன்று மற்றும்  செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்