பீகார் மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீகாரில் சமீபத்தில் பதவியேற்ற நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அம்மாநிலத்தில் வரும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்படுவதாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், பீகார் மாநிலத்தில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்களை நிதிஷ் குமார் பாராடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.