தன்னைத் தாக்கியவர்களை சந்திக்கும் கெஜ்ரிவால்!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2014 (12:32 IST)
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தல் பிரச்சாரத்தின் போது இரண்டு பேர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
தன்னைத் தாக்கியவர்களை நேரில் சந்திக்க கெஜ்ரிவால் முடிவெடுத்துள்ளார். இன்று அவர்களை சந்திக்கிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
முதலில் கிராரி சென்று தன்னைத் தாக்கிய 38 வயது லாலி என்பவரைச் சந்திக்கிறார். லாலி ஒரு ஆட்டோ டிரைவர். செவ்வாய்க்கிழமையான நேற்று இவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுல்தான்புரியில் மாலையிட்டு பிறகு பளார் பளார் என்று அறைந்தார்.
 
இந்தத் தாக்குதலில் கெஜ்ரிவாலின் இடது கண் வீங்கிப்போனது.
 
பிறகு 19 வயது அப்துல் வாஹித் என்பவரை சந்திக்கிறார் கெஜ்ரிவால். இவர் டெல்லி ஜாமியா நகர் குடியிருப்பு வாசி ஆவார். இவர் ஏப்ரல் 4ஆம் தேதி டெல்லியில் தக்ஷின் புரி பகுதியில் கெஜ்ரிவாலை இரண்டு குத்து விட்டார்.