3வது நாளாக உயர்ந்த தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (10:38 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.35,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.35,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,485க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.74.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்