பிஎஸ்என்எல் செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஜியோவுக்கு நேரடி போட்டியாக சில சலுகைகளை அறிவித்துள்ளது.
339 ரூபாய்க்கு 28 நாளைக்கு தினமும் 3 ஜிபி டேட்டா கட்டணமின்றி வழங்கும் புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
இதில், பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அனைத்து வெளி அழைப்புகளுக்கும் இலவசம், அதேபோல் வேறு நிறுவன எண்களுக்கு பேசும்போது தினமும் 25 நிமிடங்கள் இலவசம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 3 அதிரடி சலுகைகளையும் பிஎஸ்என்எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
# முதல் திட்டத்தில் 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாளைக்கு தினமும் 2 ஜிபி டேட்டா.
# 2 வது திட்டத்தில் 333 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா இலவசம்.
# 3 வது திட்டத்தில் 395 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம்.
இது தவிர பிஎஸ்என்எல் எண்களுக்கு 3000 நிமிடங்களும், தனியார் நிறுவன எண்களுக்கு 1800 நிமிடங்களும் இலவசமாக பேசலாம். இதன் வேலிடிட்டி 71 நாட்கள். இந்த அதிரடி சலுகைகள் அனைத்தும் வரும் 24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.