ஐபிஎல்-ல் புதிய அணியை வாங்கும் ரொனால்டோ அணி? – டெண்டர் நீட்டிப்பு!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (11:30 IST)
ஐபிஎல் போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு அணியை வாங்க பிரபல கால்பந்து அணி ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பிரபலமாக நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் தற்போது 8 அணிகள் உள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக இரண்டு அணிகளை சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் புதிய அணிகளில் ஒன்றை வாங்க பிரபல க்ளாசியர் குழுமம் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் டெண்டர் தேதியை அக்டோபர் 5ல் இருந்து அக்டோபர் 10க்கு ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐரோப்பாவில் பிரபலமாக உள்ள கால்பந்து அணிகளில் ஒன்று மான்செஸ்டர் யுனிடெட். ஈரோப் லீக், லா லிகா, எல் கோப்பா உள்ளிட்ட பல தொடர்களில் பதக்கம் வென்றுள்ள இந்த அணியை க்ளாசியர் குழுமம் நிர்வகித்து வருகிறது. உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்