இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பத்து நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், திடீரென அமெரிக்கா இந்தப் போரில் களமிறங்கியது. ஈரானின் முக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்கப் படைகள் தாக்கிய நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ஈரான் இன்னும் பயங்கர விளைவுகளை சந்திக்கும் என்றும் எச்சரித்தது.
இந்த நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல. ஆனால், அதே நேரத்தில் தற்போதைய ஈரான் ஆட்சியால் நாட்டை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால் ஏன் ஆட்சி மாற்றம் நடைபெறக்கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.