நேற்று அதிகாலை ஈரானில் உள்ள மூன்று அணுமின் நிலையங்களை அமெரிக்க ராணுவம் அதிரடியாக தாக்கியது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா இந்திய வான்வெளியை பயன்படுத்தியதாகக் கூறப்படும் செய்தியை அடுத்து, மத்திய அரசு அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் தெரிவித்து வரும் நிலையில், நேற்று ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசியிருந்தார்.
இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதலை ரகசியம் காப்பதற்காக பி2 பாம்பர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவை இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் பரவின.