மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த பெண் ரகளை....போக்குவரத்து பாதிப்பு

சனி, 27 மே 2023 (20:04 IST)
ஈரோடு மாநகரின் மையப்பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா அருகே மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த பெண் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாநகரின் மையப்பகுதியான பன்னீசெல்வம்  பூங்கா அருகே மது மற்றும் கஞ்சா போதையில் பெண் ஒருவர்  இன்று ரகளையில் ஈடுபட்டார்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்துப் போலீஸார் லட்சுமியை சமாதானப் படுத்த முயன்றனர்.

ஆனால், அப்பெண் சமாதானமாகாத  நிலையில், சுமார் 4 நிமிடத்திற்குப் பறகு லட்சுமியின் கைகளை ஒருதுப்பட்டாவால் பின்புறமாகக் கட்டி, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்