அமைதிக்கு மறுபெயர் ட்ரம்ப்! நோபல் பரிசு குடுக்கணும் அவருக்கு..! - ஜிங் ஜக் அடிக்கும் பாகிஸ்தான்!

Prasanth K

சனி, 21 ஜூன் 2025 (09:18 IST)

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென பாகிஸ்தான் பரிந்துரைத்துள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே எழுந்த போர் பின்னர் இரு நாடுகளிடையே பேசி தீர்க்கப்பட்டது. இரு நாடுகளிடையே போர் நிறுத்தத்தை கொண்டு வந்ததுதான் நான் தான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மார்த்தட்டி வரும் நிலையில் அதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பரிந்துரை செய்துள்ள பாகிஸ்தான், அவரால்தான் இந்தியாவுடனான போரில் அமைதி திரும்பியதாக கூறியுள்ளது.

 

நேற்று முன் தினம் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஆசிம் முனிர், அதிபர் ட்ரம்ப்பை சந்தித்த பின் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதை தொடர்ந்து அமைதிக்கான நோபல் குறித்து பேசிய ட்ரம்ப் “இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் மற்றும் காங்கோ - ருவாண்டா பகையை முடிவுக்கு கொண்டு வந்தது என பல காரணங்களுக்காக எனக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்பட வேண்டும். 

 

சொல்லப்போனால் இதுவரை நான்கு ஐந்து முறை அதை நான் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எனக்கு நோபல் தரமாட்டார்கள். அதை தாராளவாதிகளுக்கு மட்டுமே தருவார்கள்” என நோபல் நிர்வாகத்தையே விமர்சித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்