கொசுவை ஒழிக்கும் மைக்ரோசாப்ட்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (12:44 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனம் கொசுவை ஒழிக்கும் முயற்சியில் புதிதாக இறங்கியுள்ளது. இதற்காக புது ட்ரோனையும் வடிவமைத்துள்ளது.


 


 
தொழில்நுட்பத்தில் அனைத்தும் நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது கொசுவை ஒழிக்கும் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளது.
 
இதற்காக ஒரு புது நவீன தொழில்நுட்ப பொறியை உருவாக்கியுள்ளது. அந்த பொறியில் நோயை பரப்பக்கூடிய கொசு சிக்கினால், பொறி மூலமாக அந்த கொசுவை பற்றிய தகவல்கள் சுகாதார அதிகாரிகளுக்கு சென்றுவிடும்.
 
இத்தகைய நவீன பொறியை ட்ரோன் மூலம் இயக்கி வருகின்றனர். கொசுகள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு இந்த ட்ரோன் பொறியை சுமந்து கொண்டு சென்று அங்கு வைத்துவிடும்.
 
பின்னர் பொறியில் கொசு சிக்கினால் அதைப்பற்றிய தகவல்கள் அதிகாரிகளுக்கு சென்றுவிடும். மீண்டும் பொறியை ட்ரோன் சுமந்து கொண்டு திரும்ப வந்துவிடும். இப்படிதான் மைக்ரோசாப்ட் கொசு ஒழிக்கும் புதிய ஆய்வை நடத்தி வருகிறது.
அடுத்த கட்டுரையில்