ஒருமையில்தான் பேசுவேன்.. கருப்போ, காவியோ என் மேல் ஒட்டாது! – கமல்ஹாசன் பேச்சு!

ஞாயிறு, 21 மார்ச் 2021 (12:04 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் தான் குற்றவாளிகளை ஒருமையில்தான் பேசுவேன் என கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதன்முறையாக போட்டியிடும் நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கோவையில் தங்கியுள்ள அவர் அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மக்கள் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் “மக்கள் பிரச்சினையை சட்டசபை மட்டுமல்ல தேவைப்பட்டால் ஐநா சபைக்கே கொண்டு செல்வேன். உண்மையான மக்கள் பிரதிநிதி நான். என்மேல் காவியோ, கருப்போ எந்த சாயமும் ஒட்டாது. எனக்கு சாயம் பூச முயற்சிக்க வேண்டாம்” என பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்