ஈரானை சுற்றி வளைத்த இஸ்ரேல் போர் விமானங்கள்! அணுசக்தி நிலையங்கள் குறிவைத்து தாக்குதல்!

Prasanth K

சனி, 21 ஜூன் 2025 (09:51 IST)

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் நள்ளிரவில் ஈரானை சூழ்ந்த இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

 

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் பகுதிகளை தொடர்ந்து ஈரான் ஏவுகணைகளால் தாக்கி வருகிறது. இஸ்ரேலும் ஒருபக்கம் பதிலடி கொடுத்து வந்தாலும், இந்த போரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது. ஆனால் அமெரிக்காவோ தொடர்ந்து எச்சரிக்கை அறிக்கைகளை மட்டுமே ஈரானுக்கு எதிராக வெளியிட்டு வருகிறது.

 

இந்நிலையில் ஈரான் நினைத்தால் 15 நாட்களுக்குள் அணு குண்டுகளை தயாரித்து விடும் ஆபத்து உள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வந்தது. அதை தொடர்ந்து இஸ்ரேலின் 60க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளன. பெரும்பாலும் அவை அணுசக்தி நிலையங்களையும், ஏவுகணை தளங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளன. அதை தொடர்ந்து ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்