மக்கள் ஏற்றால் அரசியல்; இல்லையேல் திருமணம் : ஐரோம் ஷர்மிளா முடிவு

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (19:59 IST)
மணிப்பூரில் 16 வருடங்களாக அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும் ஐரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரத்தை  கடந்த 9 ஆம் தேதி,  முடித்துக் கொண்டார்.


 

 
ஷர்மிளா மணிப்பூரின் இரும்புப் பெண் என்று அழைக்கப்படுகிறார். இவர், மணிப்பூரில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பு பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 16 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
 
இதனால், அவர் அடிக்கடி கைது செய்யப்படுவதும், விடுதலையாவதும் வாடிக்கையான ஒன்று. இவரை மணிப்பூர் போராளி  என்றும் மக்கள் அழைக்கின்றனர். 
 
இவர் தனது நீண்ட வருட உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போது“ எனது இத்தனை வருட உண்ணாவிரதத்திற்கு பதிலளிப்பதில் மணிப்பூர் அரசு தோற்றுவிட்டது. எனவே அதை நிறுத்துவது என்று முடிவெடுத்து விட்டேன். எனவே, அரசியலில் போட்டியிட்டு இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட முடிவெடுத்துள்ளேன்” என்று கூறியிருந்தார்.
 
உண்ணாவிரதத்தை கை விட்டாலும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல வருடங்களாக அவர் திட உணவுகளை எடுத்துக் கொள்ளாததால், மருத்துவர்களின் அறிவுரைப்படி, தொடர்ந்து அவருக்கு திரவு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தனது எதிர்காலத்தை பற்றி கருத்து தெரிவித்த அவர் “அடுத்த வருடம் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளேன். மக்கள் என்னை ஏற்றுக்கொண்டால் அரசியலில் தொடர்வேன். இல்லையெனில், எனது தனிப்பட்ட வாழ்க்கையை தொடங்குவேன்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்