பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், அவரை சந்திக்க அவரது மனைவிக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத தீர்மானத்தால் பதவி இழந்தார். அதன் பின்னர் புதிய பிரதமர் பதவி ஏற்றார்.
இந்த நிலையில், இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுத்தி உயிரிழக்க வைக்க சதி திட்டம் தீட்டப்படுவதாகவும், அவரது கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சிறையில் உள்ள இம்ரான் கானை ஆறு பேர் வரை சந்திக்கலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தாலும், அவரது மனைவியை கூட சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக இம்ரான் கான் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.