உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்- இலங்கை சபா நாயகர் அறிவிப்பு

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (20:24 IST)
இலங்கை  நாட்டில் தற்போது பொருளாதார   நெருக்கடி  ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

ஒரு கிலோ ஆப்பிள் ரூ.1000, ஆகவும், பேரிக்காய் ரு.1500 ஆகவும் சந்தையில் விற்கப்படுகிறது.

பணக்கார்களை தவிர ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும்  பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.எரிபொர்ட்கள் விலையும் உயர்ந்துள்ளது.

இதனால் அரசின் மீது மக்களும் வியாபாரிகளும் கோபத்தில் உள்ளனர். மேலும் சீனாவில் அதனைத்தையும் இலங்கை அரசு விற்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. 

இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை அரசு  நிதி உதவி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேலும்,  இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என  அந்நாட்டு சபையில் சபா நாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்