முககவசம் அணிய மறுத்த பயணிகளை தாக்கிய சக பயணி !

புதன், 5 ஆகஸ்ட் 2020 (22:43 IST)
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்குச் சொந்தமான ஐபிசா தீவுக்கு ஒரு விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில் இருந்த நபர் இரண்டு பேர் முகககவசம் அணிய மறுத்தக் காரணத்திற்காக சக பயணிகள் அவர்களை தாக்கியுள்ளனர்.

ஏறகனவே, உலகம் முழுவதும் கொரொனா பரவி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். பெரும் அச்சத்தின் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேமில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்குச் சொந்தமான ஐபிசா தீவுக்கு ஒரு விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில் இருந்த நபர் இரண்டு பேர் மது அருந்தியும் மற்றவர்க்ளை தகாத வார்த்தைகளா பேசியும் முகககவசம் அணிய மறுத்ததாகத் தெரி்கிறது.

பின்னர், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, சக பயணிகள் இணைந்து அவரைத் தாக்கியுள்ளனர்.

விமானம் தரையிறங்கிய பின் முககவசம் அணிய மறுத்த பயணி கைது செய்யப்படுள்ளார் என தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்