போரிடாமல் தப்பிய தீவிரவாதிகளை கொதிக்கும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்

புதன், 6 ஜூலை 2016 (17:37 IST)
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் கடுமையாக தாக்குதல்களை தொடுத்து வருகிறது. தாக்குதலில் பல ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரிழந்து வந்துள்ள நிலையில் சிலர் உயிர் பிழைக்கும் நோக்கில் சண்டை நடக்கும் பகுதியில் இருந்து போரிடாமல் தப்பினர். இதனால் கடும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ள ஐ.எஸ் அமைப்பு, போரிடாமல் தப்பி வந்த போராளிகளின் கை கால்களை கட்டி வைத்து கொதிக்கும் தண்ணீரில் மூழ்கடித்து உயிருடன் கொலை செய்துள்ளனர்.


 

நிதி நெருக்கடி காரணமாக போராளிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் வெகுவாக குறைக்கப்பட்ட நிலையில் போர்க்களத்தில் நின்று போராடுவதை பல ஐ.எஸ் போராளிகளும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்