கழுகுகள் மூலம் ட்ரோன்களுக்கு பதிலடி

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (21:47 IST)
சிறிய ரக உளவு விமானம் ட்ரோன்களுக்குப் பதிலடி கொடுக்க கழுகுகளுக்கு டச்சு காவல்துறையினர் பயிற்சி அளிக்கின்றனர்.


 

 

இந்த வகையாக பயிற்சி அளிக்கப்பட்ட கழுகுகளை விமானநிலையங்கள், பொதுநிகழ்ச்சிகள் மற்றும் சிறைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மனிதர்களை விட 4 மடங்கு கூர்மையான பார்வை திறன் கொண்ட கழுகுகளால் நீரின் ஆழத்தில் உள்ள மீனை 1.6 கி.மீ. தூரத்தில் இருந்தே கண்டறிய முடியும் என்று சொல்லப்படுகிறது.

இதற்காக அமெரிக்கன் பால்ட் கிளாட் வகைக் கழுகுகளைத் தேர்ந்தெடுத்துள்ள டச்சு காவல்துறையினர், அதன் கால்களில் 6 செ.மீ. நீளமுள்ள இரு கத்திகளையும் தாக்குதலுக்காகப் பொருத்தியுள்ளனர். மேலும், பயிற்சியின்போது கழுகுகள் 80 சதவீத அளவுக்கு தங்கள் பணியைச் சரியாகச் செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரையில்