கொள்ளையர்கள் ஹைட்ராலி ஏணி ஒன்றை பயன்படுத்தி, நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து இந்த கொள்ளையை செய்துள்ளனர். பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ், இது "மிகப்பெரிய கொள்ளை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இங்கு தினமும் சுமார் 30,000 பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.