சீனா விமான விபத்து: கருப்பு பெட்டி தேடும் பணி தீவிரம்!

செவ்வாய், 22 மார்ச் 2022 (10:24 IST)
சீனாவில் விபத்து நிகழ்ந்த விமானத்தில் இருந்த 132 பேரும் உயிரிழந்துள்ளனர் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

 
சீனாவை சேர்ந்த போயிங் விமானம் நேற்று மலையில் விழுந்து நொறுங்கிய நிலையில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த விமானத்தில் பயணம் செய்த 137 பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
விமான விபத்து நிகழ்ந்து 18 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை உயிரிழப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பதால் சீன ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இது தவிர, விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். எனினும், விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்டால் தான் விபத்துக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்