இந்தியா டூ அபுதாபி விமான சேவை – 10ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (09:39 IST)
கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இடையேயான விமான சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்தியா – அபுதாபி இடையே விமான சேவை தொடங்க உள்ளதாக எதிகாத் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தீவிரமடைந்த சமயம் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை துபாய் உள்ளிட்ட நாடுகள் நிறுத்தி வைத்தன.

இந்நிலையில் தற்போது எதிர்வரும் 10ம் தேதி முதல் இந்தியாவிற்கு அபுதாபியிலிருந்து விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுபோல பிற நாடுகளில் இருந்து அபுதாபி வந்து இணைப்பு விமானம் மூலமாக மற்ற நாடுகளுக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்