13 வயதில் மென்பொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சிறுவன்

திங்கள், 17 டிசம்பர் 2018 (08:50 IST)
கேரளாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் துபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கியுள்ளான்.
கேரளா மாநிலம் திருவில்லாவை சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் என்ற சிறுவன், 5 வயதில் தனது பெற்றோருடன் துபாய்க்கு சென்றான். கணினி மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன், 9 வயதில் செயலி ஒன்றை உருவாக்கினான். பின்னர் கிளைண்டுகளுக்கு லோகோ மற்றும் இணையதளங்களை உருவாக்கி கொடுத்து வந்தான்.
 
இந்நிலையில் துபாயில் ஆதித்யன் புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளான். தனது 18 வயதில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதே லட்சியம் என அச்சிறுவன் கூறியுள்ளான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்