திருமணத்தை மீறி பாலியல் உறவு கொண்டால் ஒரு ஆண்டு சிறை: புதிய சட்டம்

செவ்வாய், 6 டிசம்பர் 2022 (13:20 IST)
தமிழகத்தில் திருமணத்தை மீறிய பாலியல் உறவுக்கு கள்ளக்காதல் என்று கூறி வரும் நிலையில் ஒரு சிலர் மட்டும் திருமணத்தை மீறிய புனிதமான உறவு என்று கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்தோனேசியாவில் திருமணத்தை மீறி பாலியல் உறவு கொண்டால் ஒரு ஆண்டு சிறை தண்டனை என புதிய சட்டத்தை இயற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
திருமணத்தை மீறி கணவன் அல்லது மனைவி வேறு ஒரு ஆண் அல்லது பெண்ணுடன் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அந்தக் குற்றத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை கொடுக்கும் புதிய சட்டத்தை இயற்ற இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது
 
வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் மசோதாவாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்