தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று காலையில் கோபாலபுரத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி, அப்போது அவர் கூறியபோத், தங்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும், ஆட்சி அமைக்க தேவையான அளவிற்கு வெற்றி பெறுவோம் என்றும் கருணாநிதி கூறினார்.