சென்னையில், அதிக வேட்பாளர்களைக் கொண்ட தொகுதியாக ஆர்.கே. நகர் தொகுதி உள்ளது.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வேட்புமனு வாபஸ் பெற இன்று மாலையுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் அதிக வேட்பாளர்களைக் கொண்ட தொகுதியாக, ஆர்.கே. நகர் தொகுதி இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடதக்கது.