தேர்தல் குறித்து அமெரிக்க தமிழர்களின் கருத்து

Webdunia
வியாழன், 12 மே 2016 (20:44 IST)
தமிழக சட்டசபை தேர்தல் குறித்து அமெரிக்க வாழ் தமிழர்கள் கருத்து தெரித்துள்ளனர்.


 

 
தமிழக சட்டசபை தேர்தல் குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அமெரிக்காவில் உள்ள தமிழர்களிடம் கருத்து கேட்டது.
 
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையாக மக்கள் வரும் தேர்தலில் மாற்றத்தையே விரும்புகின்றனர். அதேபோல் அமெரிக்காவில் உள்ள தமிழர்களும் மாற்று அரசை விரும்புகின்றனர்.
 
இதைத்தொடர்ந்து அமெரிக்க வாழ் தமிழர்கள் கூறியிருப்பதாவது:-
 
வேலை வாய்ப்பு உருவாக்கும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். கருத்துக் கணிப்புகள் எப்பொதும் சரியாக இருப்பதில்லை. காசு வாங்காமல் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.
 
இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் இல்லாமல், வெறு புதிய கட்சிகள் வெற்றி பெற வேண்டும். நிலையான ஆட்சி அமைய வேண்டியது அவசியம். கருத்துக் கணிப்பு என்பது மக்கள் மனதில் தேர்தல் முடிவு பற்றி விதை விதைப்பது போன்றது, என்று தெரிவித்துள்ளனர்.
 
அதோடு, சிறந்த ஆட்சி அமைய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
அடுத்த கட்டுரையில்