ஜெயலலிதா தனது சொத்துக்களை மக்களுக்கு எழுதி வைக்கத் தயாரா?: விஜயகாந்த்

Webdunia
வியாழன், 12 மே 2016 (19:42 IST)
நேற்று திருச்சியில் தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாகா சார்பில் நடைபெற்ற மாற்று அரசியல் மாநாட்டில் பேசிய அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த், ஜெயலலிதா தனது சொத்துக்களை மக்களுக்கு எழுதி வைக்கத் தயாரா என கேள்வி எழுப்பினார்.


 
 
தமிழக சட்டசபையை ஜெயலலிதா புகழ்பாடும் கூடாரமாக மாற்றி வருவதாக கூறிய விஜயகாந்த். மக்களுக்காக நான் மக்களால் நான் எனக் கூறும் ஜெயலலிதா. குடும்பம் இல்லை என்றும் கூறுகிறார். குடும்பம் இல்லை எனக் கூறும் ஜெயலிலதா தனது சொத்துக்களை மக்களுக்காக எழுதி வைக்கத் தயாரா என கேள்வி எழுப்பினார்.
 
முன்னதாக பல்பை கண்டுபிடித்தது எடிசன், ஊழலை கண்டுபிடித்தது கருணாநிதி என, திமுக தலைவர் கருணாநிதியையும் விமர்சித்தார் விஜயகாந்த். மேலும் வேஷ்டி கட்டிய ஜெயலலிதா, சேலை கட்டிய கருணாநிதி எனவும் விமர்சித்தார் விஜயகாந்த்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்