கோப்ரா படத்தையும் கைப்பற்றுகிறதா ரெட் ஜெயண்ட்? தொடங்கிய வியாபாரம்!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (16:00 IST)
விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த கோப்ரா கடந்த மாதம் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்போது ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுவரை படங்களை வெளியிட்டு கமிஷன் பெற்றுக்கொண்டு இருந்த ரெட் ஜெயண்ட்ஸ் முதல் முறையாக விலை கொடுத்து படத்தை வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்