ஓடிடியில் களமிறங்கும் யுவன் ஷங்கர் ராஜா – கதாநாயகி இவர்தான்!

வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (09:30 IST)
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் புதிய படத்தில் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடியின் வளர்ச்சி இமாலய அளவில் உயர்ந்துள்ளது. இதை முன்னிட்டு இப்போது ஓடிடி நிறுவனங்கள் தங்கள் ஒரிஜினல் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் முயற்சியாக யுவன் ஷங்கர் மூலமாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளது.

யுவன் தயாரிக்கும் அந்த படத்தை ஒரு நாள் கூத்து மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன்  இயக்க பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இது அமையவுள்ளது. இந்த படத்தை அதிக பொருட்செலவில் யுவன் தயாரிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்