குட் பேட் அக்லி மீது வழக்குத் தொடரும் இளையராஜா? அந்த பாட்டை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதா படக்குழு?

Prasanth Karthick

செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (13:07 IST)

அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளியாகியுள்ள படம் குட் பேட் அக்லி. சிம்ரன், த்ரிஷா, பிரியா வாரியர், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 

இந்த படத்தில் பல பகுதிகளில் நாஸ்டால்ஜியாவிற்காக பழைய பட பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறாக கமல்ஹாசன் நடித்து வெளியான சகலகலா வல்லவன் படத்தில் வரும் ‘இளமை இதோ இதோ’ என்ற பாடலை அஜித்தின் சண்டை காட்சி ஒன்றில் பயன்படுத்தி இருந்தனர். அதுபோல அர்ஜூன் தாஸ் எண்ட்ரிக்கு ‘ஒத்த ரூபா தாரேன்’ என்ற பழைய பாடலை பயன்படுத்தி இருந்தனர். இந்த பாடல்களுக்கு அப்போது இசையமைத்தவர் இளையராஜா.
 

ALSO READ: தொடங்கிய மீன்பிடித்தடைக்காலம்.. திரும்பி வந்த படகுகள்! எகிறும் மீன் விலை!
 

இந்நிலையில் இதுகுறித்து இசையமைப்பாளர் தற்போது குட் பேட் அக்லி படக்குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் தான் இசையமைத்த பாடல்களை படத்தில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அதற்கு இழப்பீடாக ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழக்குத் தொடரப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

குட் பேட் அக்லி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் இளையராஜாவின் இந்த நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்