ஆல் அவுட் ஆன இந்தியா… பாலோ ஆன் கொடுக்காத இங்கிலாந்து!

திங்கள், 8 பிப்ரவரி 2021 (11:09 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வரும்  முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது 578 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியின் சற்றுமுன்னர் 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.ந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி 85 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி 389 ரன்கள் சேர்க்க வேண்டும். ஆனால் அதற்கு இந்திய அணி 52 ரன்கள் பின் தங்கியது. ஆனால் இங்கிலாந்து அணி பாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து விளையாடப் போவதாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்