அந்நியன் ரீமேக்கில் ரண்வீர் சிங்கா?... விக்ரம் அளித்த பதில்!

vinoth

செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (10:01 IST)
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரே ரன்வீர் சிங்கை வைத்து இயக்க இருந்தார். ஆனால் தமிழ் அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்ய கூடாது என ஷங்கருக்கு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

மேலும் அந்நியன் படத்தின் கதை உரிமை தன்னிடம்தான் உள்ளது என்றும் அதை தன் அனுமதி இல்லாமல் படமாக்க முடியாது என்றும் கூறியிருந்தார். அதனால் அடுத்தகட்டத்தை நோக்கி அந்த படம் நகரவில்லை. ஷங்கரும் தன்னுடைய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பேசிய விக்ரம் “அந்நியன் படத்தில் ரண்வீர் சிங் நடித்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். அவரின் நடிப்பைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்திருக்கும். அதே போல இயக்குனர் ஷங்கர் அந்நியன் 2 எடுக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்