’’உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி….சூப்பர் ஸ்டார் குறித்து விஜய் பட நடிகர் டுவீட்

திங்கள், 5 அக்டோபர் 2020 (16:54 IST)
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் ஜனசேனா கட்சியின் தலைவரும், சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கால்யாண் தற்போது வக்கீல் சாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தியின் வெளியான பிங்க் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் கன்னட சினிமா சூப்பர் ஸ்டாரும் விஜய் நடித்த புலி படத்தில் வில்லனுமான கிச்சா சுதீப் இன்று பவன் கல்யாணை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

அப்போது பவன்கல்யாண் அவரிடம் ஒரு செடியைக் கொடுத்தார்.

இதுகுறித்து சுதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :  நான் எளிமையான மனிதராக பவன்கல்யாணை சந்தித்தேன்.  நான் உங்களுடன் தொடர்புகொண்டு பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Met a simple grounded human @PawanKalyan i must admit. Wonderful interacting with you sir. pic.twitter.com/Da50XnKaUC

— Kichcha Sudeepa (@KicchaSudeep) October 5, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்