ரசிகர்களிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினாரா விஜய்… பரபரப்பைக் கிளப்பிய தகவல்!

vinoth

சனி, 27 ஜனவரி 2024 (07:15 IST)
தனது சினிமா மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் விஜய், தற்போது அரசியலில் இறங்கப் போவதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப் படுத்துவது போல விஜய்யும் அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சில நிர்வாகிகளை சந்தித்தார். அதில் ரசிகர்களோடு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்றும் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.

அது மட்டுமின்றி இந்த இயக்கத்தின் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவருக்கு கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு உரிமை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.  மேலும் ஆலோசனைக்கு வந்திருந்த ரசிகர்களிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்