ஜெர்ஸி புகழ் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்த இந்த படம் நேற்று ரிலீஸான நிலையில் ரிலீஸுக்குப் பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஏற்கனவே பார்த்து சலித்துப்போன கதையை எடுத்து வைத்துள்ளதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். ரெட்ரோ மற்றும் சலார் போன்ற படங்களை நினைவூட்டுவதாக உள்ளதாகவும் சொல்லப்பட்டது.