திரைப்பட சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறி, ஜோய் கிரிசில்டா எ காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்னர் புகார் அளித்துப் பரபரப்பைக் கிளப்பினார். ஜாய் கிரிசில்டா சினிமாவிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியவர். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக ஜாய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தனக்கும் ரங்கராஜுக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் தற்போது தான் கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால் ரங்கராஜ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோய் கிரிசில்டா, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் நடந்தது அதன் பிறகு இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக ரங்கராஜ் தன்னுடன் பேசுவதைத் தவிர்த்து வருகிறார். அவர் தன்னுடைய முதல் மனைவியை சட்டப்படி பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். என்னுடைய குழந்தைக்கு அவர் பதில் சொல்லவேண்டும். அவர் என்னோடு வாழவேண்டும்.” எனக் கூறியிருந்தார்.
இது சம்மந்தமாக ரங்கராஜ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் தற்போது ஜாய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரங்கராஜ் ஹாய் பொண்டாட்டி. இப்பதான் வீட்டுக்கு வந்தேன். ஒரு மீட்டிங் முடிஞ்சிடுச்சு. ஒரு காஃபி குடிச்சேன். I miss you. …” என்றெல்லாம் ரொமான்ஸாகப் பேசியுள்ளார். இதனால் ஜாயின் குற்றச்ச்சாட்டின் மீதான் உண்மைத்தன்மை அதிகரித்துள்ளது.