விடுதலை 2 திரைப்படம் ரிலீஸையடுத்து வெற்றிமாறன் தற்போது வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வாடிவாசல் திரைப்படத்துக்கான திரைக்கதையை செப்பனிடும் பணியை வெற்றிமாறன் தன்னுடையக் குழுவினரோடு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யா தற்போது வெங்கட் அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது திடீரென்று சமூகவலைதளங்களில் வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாகவும், வெற்றிமாறன் அடுத்து உடனடியாக சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவலின் உண்மைத் தன்மை என்னவென்று தெரியவில்லை,