அதே சமயம், தமிழ் சினிமாவில் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இதுவரை ஓடிடி நிறுவனங்கள் படங்களின் பட்ஜெட்டில் 60% வரை டிஜிட்டல் உரிமைகளுக்காக வழங்கின. ஆனால் இப்போது, பாக்ஸ் ஆபிஸ் வசூலின் அடிப்படையில் மட்டுமே டிஜிட்டல் உரிமைகளுக்கான தொகையை நிர்ணயிக்க தொடங்கியுள்ளன.
இதனால், தயாரிப்பாளர்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கும். இது, பெரிய பட்ஜெட் படங்களுக்கு பெரும் சவாலாக அமையும் என்றும், குறிப்பாக ஃபைனான்ஸ் வாங்கி படம் எடுப்பவர்கள் இனி படம் எடுப்பது கடினம் என்றும் கூறப்படுகிறது.