அறம் படத்துக்குப் பிறகு இயக்குனர் கோபி நயினார் இப்போது ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கிட்டத்தட்ட ஒரே அறையில் நடக்கும் கதைக்களமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மனித உரிமை மீறல்கள் குறித்த கதையாக இந்த படத்தை கோபி உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய கிராஸ்ரூட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார்.
இந்த படம் சென்சாருக்கு சென்ற நிலையில் அங்குள்ள அதிகாரிகள் பல காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க சொன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனால் படக்குழு படத்தை மறுசென்சாருக்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் “படத்தை சென்சார் செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்கவேண்டும்” என்றும் சுதந்திர வரம்புக்குட்படாதக் காட்சிகளை நீக்க சம்மதம்” என்றும் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.