’’ஜெய்பீம்’’ படத்திற்கு வன்னியர் சங்கம் கண்டனம்

சனி, 6 நவம்பர் 2021 (15:41 IST)
நடிகர் சூர்யா நடிப்பில்        ஞானவேல் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான படம் ஜெய்பீம். இப்படம் நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு வன்னியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  அதில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொலை செய்திருக்கிறது…என்பதைக் காட்டுவதற்கு அந்த கொலையை செய்த காவலர் ஒரு வன்னியர் என்ற பொய்யை படக்குழு காட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு படைப்பு சமூகத்தை பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்தக் கூடாது என இயக்குநர் கவுதமன் நடிகர் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்