பழங்குடி மக்கள் கல்விக்காக ரூ.1 கோடி நிதி வழங்கிய நடிகர் சூர்யா!

திங்கள், 1 நவம்பர் 2021 (12:37 IST)
நடிகர் சூர்யா பழங்குடி மக்கள் கல்விக்கா நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ள நடிகர் சூர்யா பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி நிதியை அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்