மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்!

திங்கள், 11 அக்டோபர் 2021 (23:41 IST)
பிரபல பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தி சினிமாவில் பா, சீனிகம் ,ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பால்கி. இவர் ஒரு இந்தி படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும்,  சன்னிலியோன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 இப்படத்திற்கு சுப் என பெயரிட்டுள்ளனர். ஏற்கனவே இரண்டு இந்திப் படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மானுக்கு சுப் 3 வது இந்திப் படமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்