நடிகை த்ரிஷாவை உத்தரபிரதேச போலீஸ் ஆக்கிய அரசியல்வாதிகள்!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (23:14 IST)
நடிகை த்ரிஷாவை உத்தரபிரதேச போலீஸ் ஆக்கிய அரசியல்வாதிகள்!
நடிகை த்ரிஷாவை உத்தரபிரதேச மாநில போலீஸ் ஆகிய அரசியல்வாதிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நடிகை திரிஷா தற்போது பிருந்தா என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பதும் இதில் அவர் தெலுங்கானா மாநில போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அவர் போலீஸ் உடையில் இருந்த புகைப்படத்தை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்த நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆனது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் தங்கள் மாநிலத்தில் பெண் போலீஸ் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள் என திரிஷாவின் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகி வருகின்றனர்
 
உத்தரப் பிரதேச மாநில மக்களுக்கு திரிஷாவை யாரென்று தெரியாததால் அவரை உண்மையிலேயே உத்தரப் பிரதேச போலீஸ் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர் 
 
ஆனால் இந்த புகைப்படம் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கேலிக்கு  உள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்