மெர்சல் சென்னை ரிலீஸ் குறித்த வதந்தி: தயாரிப்பு நிறுவனம் அதிரடி!!

வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (18:00 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முறமாக ஒருபக்கம் நடந்து வருகிறது.


 
 
இந்நிலையில், இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தையும் தேனாண்டாள் நிறுவனம் சுறுசுறுப்பாக பார்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையை அபிராமி திரையரங்கின் உரிமையாளர் அபிராமி ராமநாதன் பெற்றதாக தகவல் வெளியானது.
 
தற்போது, இதற்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் மெர்சல் படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினமே உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்