தனி ஒருவன் கதை ஜெயம் ரவிக்காக எழுதப்பட்டது இல்லை… மோகன் ராஜா பகிர்ந்த தகவல்!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:41 IST)
2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜாவின் முதல் சொந்தக் கதை இந்த திரைப்படம்.

மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாவது பாகத்துக்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த ஆண்டு படத்துக்கான ஷூட்டிங் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் இயக்குனர் மோகன் ராஜா ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “தனி ஒருவன் கதையை நான் ஜெயம் ரவிக்காக எழுதவில்லை. பிரபாஸுக்காகதான் எழுதினேன். ஆனால் அப்போது அவர் ஒரு காதல் கதையில் நடிக்க ஆர்வமாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்