சமந்தா பொண்ணு சிங்கப்பூர் செல்லும் ரகசியம்?

Webdunia
வியாழன், 12 மே 2016 (14:55 IST)
இளசுகளின் கவர்ச்சிப்புயல் நடிகை சமந்தா பொண்ணு சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
நடிகை சமந்தா நடிப்பில், தற்போது வெளிவந்த விஜய்யுடன் நடித்த தெறி மற்றும் சூர்யாவுடன் நடித்த 24 ஆகிய இரு தமிழ்ப் படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.
 
அந்த சந்தோஷத்தில், தனது டிவிட்டர் பதிவில், கடும் இக்கட்டான நிலையை தாண்டிவிட்டேன். எனது கடைசிப் படம் வெளியாகிவிட்டது. நான், இன்று நிம்மதியாகத் தூங்குவேன்.
 
எனவே, இனி சிறிது காலத்திற்கு புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று பதிவிட்டார். இந்த நிலையில், நடிகை சமந்தா சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாக வதந்தி பரவியது.
 
ஆனால், ஓய்வுக்கான காரணம் அதுவல்ல, அவருக்கு உடலில் வெப்பம் காரணமாக தோல் ஒவ்வாமை உள்ளதாம். இதற்காக அவர், அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவ மனையில் ரகசிய சிகிச்சைப் பெற்றாராம். இதன் பிறகு சில மாதங்கள் சினிமா லைட் படாமல் ஓய்விலிருந்தார்.
 
இந்த நிலையில், நிலுவையில் உள்ள தெலுங்குப்படத்தில் நடித்து முடித்துக் கொடுத்ததுவிட்டு, சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறாராம். இதனால்தான், அவர் புதிய படங்களை தவிர்த்து வருவதாக அவரது நட்பு வட்டாராம் சுகிசுகின்றதாம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
அடுத்த கட்டுரையில்